சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இலங்கை தமிழ் மக்கள் சிங்கள அரசியலின் நடைமுறைகளினால் பல்வேறு வழிகளில்
பாதிப்பு அடைந்துள்ளனர்.
தமிழர், சிங்களவர் என்று வேறு பாடு இன்றி மக்களை
ஒன்றிணைக்க சிங்கள அரசாங்கம் தவறி விட்டது.
போராட்டம், வன்ன்முறை இன அழிப்பு என்ற தவறான வழிகளில்,
மக்களை இழுத்து சென்று விட்டது.
ஆனாலும் சிங்கள அரசாங்கத்துக்கு மக்களை நல்ல வழியில்
நடத்த ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது.
இதை அவர்கள் கவனம் எடுத்தால் சிங்கள தமிழ் என்ற வேறுபாடு
இன்றி மக்கள் நலமாக வாழ்ந்துவிடலாம்.
இலங்கை தமிழ் மக்கள் என்றும் கருதபடுவர்களே
தம் சொந்த இன மக்களின் அழிவுக்கு காரணமாகவும்,
அவர்களை அழித்தும் இருகின்றார்கள்.
இது ஒரு மிக பரிதாபத்திற்கு உடைய விடயம் ஆகும்.
வேறு இனம் ஒரு இனத்தை அழிப்பதை விட,
ஒரு இனம் தம் இனத்தை தாமே அழிப்பது மிக கொடூரமான செயலாகும்.
இதை ஒருபோதும் உணராமல் தொடர்ந்தும் தாம், தமக்கு, தம்முடைய
என்ற எண்ணத்தோடு மக்களை பாதித்தும் ஏமாற்றும் சில தமிழர்கள்,
தொடர்தும் மக்களின் பிரதி நிதிகளாக தமக்கு தாமே முக மூடிகளை
அணிந்து கொண்டு தமிழ் சமுதாயத்தை தொடர்ந்தும்
தவறான வழிகளில் கொண்டு செல்வார்கள்.
பண மோசடி, மறைமுக வன்முறை, அநீதி ஆகியவற்றை
தூண்டி விடுவார்கள். இதனால் இலங்கை தமிழ் மக்கள் என்று
கூறப்படும் இனத்தவருக்கு, தொடர்ந்தும் இன்னல்கள் இருந்துகொண்டே இருக்கும்.
இவர்கள் ஆடி அடங்கும் வரை தமிழ் மக்களுக்கு
ஒருபோதும் நிரந்தர சமாதான வாழ்க்கை அமையாது.